/* */

அந்தியூர் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

அந்தியூர் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா தாளபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 55). விவசாயி. நேற்று இரவு வழக்கம் போல் ஈஸ்வரன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 3 மணி அளவில் வீட்டு வெளியே இருக்கும் கழிப்பறைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதனால் ஈஸ்வரன் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ஈஸ்வரன் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறி மயங்கி விட்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் ஈஸ்வரன் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளித் திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்