/* */

பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு

பள்ளிபாளையத்தில் பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குபதிவு.

HIGHLIGHTS

பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு
X

சேதமடைந்த பேக்கரி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளியபாளையம் பிரிவு என்ற இடத்தில் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த முகமது என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த காசி முருகன் மற்றும் சண்முகம் ஆகியோர், பேக்கரிக்கு சென்று பொருட்களை பெற்று கொண்டு பணத்தை நாளை தருகிறேன் என கூறியதாக தெரிகிறது. ஆனால் முகமது இப்போதே பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியதால், வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தகாத வார்த்தையால் திட்டிய மூன்று பேரும் பேக்கரியில் புகுந்து நாற்காலி மற்றும் உள்ளே இருந்த பொருட்களை உடைத்தனர். மேலும் முகமதுவை கையால் தாக்கிய மூன்று பேரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் முகமது கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...