/* */

அந்தியூரில் வீசிய சூறாவளிகாற்று : 3 கோடி ரூபாய் மதிப்பிலான வாழை சேதம்

அந்தியூர் மற்றும் அத்தாணி சுற்று வட்டார பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் மற்றும் கூரைவீடுகள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக அந்தியூர் அருகே உள்ள அதாணி, எண்ணமங்கலம், மந்தை, ராசாகுளம், மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கதளி, செவ்வாழை ,மொந்தன் நேந்திரன் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.

மேலும் கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன. இதனால் தங்களுக்கு சுமார் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் ஆலாம்பாளையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீட்டின் மேற்கூரைகள் சூறாவளி காற்றால் தூக்கி வீசப்பட்டுள்ளன. மேலும் மின்சார கம்பி மீது மரங்கள் முறிந்து விழுந்ததால், நேற்று இரவு முதலே அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை சரிபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 8 July 2021 8:37 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  3. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  4. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  6. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  7. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  8. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
  9. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்