/* */

அந்தியூர்: தனியார் பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி

அந்தியூர் அருகே தனியார் பேருந்து மோதியதில், கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அந்தியூர்: தனியார் பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பருவாச்சி அருகே உள்ள பிச்சனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (58).கூலி தொழிலாளி. நேற்று இரவு பருவாச்சி அருகே உள்ள பெட்ரோல் பங்கில், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, பருவாச்சி புன்னம் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்தியூரில் இருந்து ஈரோடு செல்லும் எஸ்பிஎம் என்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மீது மோதியது.

இதில், தலை கால் பகுதிகளில் பலத்த காயமடைந்த பழனிச்சாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரது மனைவி சரசால் (50) கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 29 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்