/* */

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு

தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு
X

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை விவசாயிகள் டிராக்டர் மூலம் விரட்டினர்.

தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் விளைவித்த பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தாளவாடி அருகே உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட தமிழ்புரம் ஜோரக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாசில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. இதனைக் கண்டு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து யானையை விரட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் வனப்பகுதிக்குள் செல்லாமல் காட்டு யானை அங்கு உலவியது. இதனையடுத்து, விவசாயிகள் டிராக்டர் இயந்திரத்தை பயன்படுத்தி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனையடுத்து விவசாயிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Updated On: 26 Jan 2024 1:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  5. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  6. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  7. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  8. சோழவந்தான்
    மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா
  9. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்