Begin typing your search above and press return to search.
ஈரோடு அருகே பேருந்தும், லாரியும் மோதி விபத்து : 5 பேர் பலி
ஈரோடு அருகே ஆம்னி பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
HIGHLIGHTS

சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.
ஈரோடு மாவட்டம் பாரப்பாலையம் பகுதியில் பழனி மலைக்கு சென்று விட்டு ஈரோடு திரும்பிய ஆம்னி பேருந்தும் ஈரோட்டில் இருந்து வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் வந்த 7 நபர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.