Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்; 2 பேர் கைது
ஈரோட்டில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மோளக்கவுண்டன்பாளையம் பகுதியிலுள்ள கைராலி ஆயுர்வேத மசாஜ் சென்டரில், பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஈரோடு தாலுாகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரெய்டு சென்ற போலீசார், விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜீபு (வயது 26), சிஜோ (வயது 25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை மீட்டு, கோவையில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.