/* */

பங்களாப்புதூர் , சித்தோடு பகுதிகளில் மளிகை கடையில் குட்கா விற்ற 2 பேர் கைது

Police Arrest- பங்களாப்புதூர், சித்தோடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்காவை மளிகைக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Police Arrest | Gutka Ban
X

பைல் படம்.

Police Arrest- ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நூர்முகம்மது (வயது 35). மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது கடையை சோதனை நடத்தினர். அப்போது கடையில் ரூ.70 ரூபாய் மதிப்புள்ள 10 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்து மளிகை கடைக்காரர் நூர்முகம்மதுவை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் முத்துராஜ் என்பவரின் மளிகை கடையில் சித்தோடு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், 15 குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சித்தோடு போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 July 2022 11:19 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து