/* */

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா தொடக்கம்

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா தொடக்கம்
X

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் யாக பூஜையுடன் மேளதாளம் முழங்க மங்கள இசையுடன் தொடங்கியது. இதில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரம் வண்ணமலர்களாலும் நாணல்புல், மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


நாளை செவ்வாய்க்கிழமை 16ம் தேதி காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்துவந்து கோவிலில் மஞ்சள்காப்பு கட்டி விரதம் தொடங்குவார்கள். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மாரியம்மன் நகர்வலம்வரும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 2–ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடைபெறும். 3–ந்தேதி பூப்பல்லக்கு விழா நடைபெறும்.

Updated On: 15 Feb 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது