/* */

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூரில் டெங்கு,கொரோனோ தடுப்பு ஆய்வு கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதிகளில், டெங்கு, கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூரில் டெங்கு,கொரோனோ தடுப்பு ஆய்வு கூட்டம்
X

கடத்தூரில் டெங்கு, கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், எதிர்வரும் 14 ந்தேதி நடைபெறும் கொரோனோ தடுப்பூசி முகாமையொட்டியும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊராட்சி செயலர்களுக்கு ஆய்வு கூட்டம், ஒன்றிய ஆணையாளர் அருள்மொழி தேவன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாவதால், கிராமங்களில் டெங்கு பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே அனைத்து கிராமங்களிலும் குடிநீர் தொட்டிகளையும், குளோரின் போட்டு சுத்தப்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும். கிராமப்பகுதிகளில், குழிகள், மட்டை, பிளாஸ்டிக், டயர் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நாள்தோறும் தண்ணீர் விடும் போது குளோரின் போட்டுதான் விட வேண்டும். வரும் 14,ந்தேதி கொரோனோ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வைக்க வேண்டும். திட்டபணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆய்வு கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கெளரி சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர், பணி மேற்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மண்டல அலுவலர் முரளிகண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறியாளர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 10 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை