/* */

அரூர் சிறைச்சாலையில் சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆய்வு

அரூர் சிறைச்சாலை வார்டன் மது போதையில் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆய்வு

HIGHLIGHTS

அரூர் சிறைச்சாலையில் சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆய்வு
X

சேலம் மத்தியில் சிறைச்சாலையின் கட்டுப் பாட்டில் உள்ள அரூர் கிளை சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் காப்பாளர், காவலர்கள், சமையலர் 13 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பணியில் ஈடுபட்ட தலைமை வார்டன் அசோக்குமார் மது போதையில் இருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்தனர். அதில் அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சிறைத்துறை டிஜிபி-க்கு இது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இதனை யடுத்து சிறைத்துறை டிஜிபி அம்ரீஷ் புஜாரி உத்தரவின் பேரில்சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் ஜி வினோத் மது போதையில் பணி செய்த தலைமை வார்டன் அசோக்குமாரை பணியிடை நீக்கம் செய்தார்.

இதனை தொடர்ந்து அரூர் சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பாளர் சிறைவா சிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அரூர் கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் அருண் உடன் இருந்தார்.

Updated On: 8 Dec 2023 9:56 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?