Begin typing your search above and press return to search.
தர்மபுரி: மாணவர்களை அடித்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
தர்மபுரியில், மாணவரை அடித்த புகாரில், அரசு பள்ளி ஆசிரியரை சி.இ.ஓ சஸ்பெண்ட் செய்தார்.
HIGHLIGHTS
தர்மபுரி அடுத்த அவ்வை நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார்,வயது 40. மாணவர்களை சரியாக படிக்கவில்லை என அடித்துள்ளார். கண்டித்துள்ளார்; அத்துடன் மாணவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெற்றோர்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் சதீஷ்குமாரை, தற்காலிகமாக இடைநீக்கம் செய்து, சி.இ.ஓ. உத்தரவிட்டார்.