/* */

தர்மபுரியில் கொலைக்கைதி தப்பியோட்டம்: போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

தர்மபுரியில் தளி பகுதியை சேர்ந்த கொலை கைதி தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரியில் கொலைக்கைதி தப்பியோட்டம்: போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
X

தப்பி ஓடிய கார்த்திக் என்கின்ற விஜி.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உளி மங்கலம் பகுதியைச் சேர்ந்த ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத் மகன் கார்த்திக் என்கின்ற விஜி வயது 33. கூலித்தொழிலாளி.

இவர் கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளைய மூர்த்தி தலைமை காவலர்கள் அசோகன், ராஜசேகர் ஆகியோர் ஆஜர்படுத்தி விட்டு, தர்மபுரி மாவட்ட கிளை சிறைச்சாலையில் ஒப்படைக்க சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளைய மூர்த்தி அவர்களின் காரில் சிறைச்சாலை முன்பு இன்று இரவு 7 மணி அளவில் வந்து இறங்கினர்.

அப்போது, தலைமைக் காவலர் ராஜசேகரை தள்ளிவிட்டுவிட்டு கை விலங்குடன் விஜி தப்பி விட்டார். இவரை அதியமான் கோட்டை போலீசார் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 22 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  2. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  3. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  4. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  5. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  6. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  7. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  10. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்