Begin typing your search above and press return to search.
தர்மபுரி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு
தர்மபுரி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாகல் பட்டி ஊத்துபள்ளத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் விஜய்.வயது 31.இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பாகல் பட்டி-முத்தம்பட்டி சாலையில் பைக்கில் சென்றார். அப்போது தனியார் நிறுவனம் அருகே சாலையில் இருந்த வேகத்தடை பைக் ஏறி இறங்கும் போது தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.