Begin typing your search above and press return to search.
தொடர் மறியல்- சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை
தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்
HIGHLIGHTS
தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் தொகை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 பிப்ரவரி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பழனியம்மாள், மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தர்மபுரி ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் எண் 1 -ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.