/* */

பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

அனைத்து மகளிர் காவல் துறையினர் சரவணக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது கைது செய்தனர்.

HIGHLIGHTS

பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
X

சரவணக்குமார்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே அந்த மாணவிக்கும், அன்னூர் பகுதியை சேர்ந்த விமான நிலையத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றும் சரவணக்குமார் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவியை மிரட்டி சரவணக்குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து சரவணக்குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும், இது குறித்து வெளியே சொல்ல முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிக்கு சென்ற அந்த மாணவி மன உளைச்சல் தங்க முடியாமல் விரக்தியில் பள்ளி கழிப்பறையில் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மாணவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் விசாரணையில் பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சரவணக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 25 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு