/* */

கோவையில் இளைஞர் உயிரை காவு வாங்கிய புதிய மேம்பாலம்: திறப்பு விழா மறுநாளில் வாகன விபத்து..!

கோவையில், புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சுவரில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோவையில் இளைஞர் உயிரை காவு வாங்கிய புதிய மேம்பாலம்: திறப்பு விழா மறுநாளில் வாகன விபத்து..!
X

கோவை-திருச்சி சாலையில் புதிய மேம்பாலத்தில் வேகமாக டூவீலரில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

கோவை ராமநாதபுரம் நாகப்பன் வீதியைச் சேர்ந்தவர் இளைஞர் பிரசாத். இவரும், புளியகுளம் பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் உதயகுமாரும் இருசக்கர வாகனத்தில் கோவை - திருச்சி சாலையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சுங்கம் பகுதியில் உள்ள மேம்பால வளைவில் திரும்பும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது நிலை தடுமாறி விழுந்த பிரசாந்த், உதயகுமார் ஆகிய இருவரும் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் வாகனத்துடன் மோதினர். இந்த விபத்தில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உதயகுமார் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலம் திறக்கப்பட்ட இரண்டாவது நாளில் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்திருப்பதும், ராசியில்லாத மேம்பாலம் எனவும், பாலம் ஒரு உயிரை காவு வாங்கி விட்டதாகவும் அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி கொண்டனர். எது, எப்படியோ புதிய பாலத்தில் இளைஞர், வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றது தான் உயிரிழப்புக்கு காரணம் என்பதே காவல்துறை தரப்பில் கூறும் உண்மை!

Updated On: 13 Jun 2022 7:34 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...