/* */

தேர்தல் நடத்தை அமலான பிறகு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல்

நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த தேவைக்காக ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம்.

HIGHLIGHTS

தேர்தல் நடத்தை அமலான பிறகு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல்
X

கோப்புப்படம் 

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறிமுதல் செய்வதற்கு பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள இந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு, தேர்தல் புகார்களை கையாள்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது.

இதில் மாவட்ட ஆட்சியர் தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கும், கண்காணிப்பு குழுவினருக்கும் தேர்தல் பணிகள் குறித்தும், தேர்தலின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.

கூட்டத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறுகையில்,

  • நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் சரியான முறையில் செயல்பட வேண்டும்.
  • பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டால், அந்தந்த பகுதி தலைமை அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பகுதி பொறுப்பாளரும் அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
  • விதிகளை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது.
  • கள்ளத்தனமாக பணம் எடுத்து செல்வது, மதுபானங்கள் வினியோகிக்க கொண்டு செல்வது உள்பட வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் விதமான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த குழுவினர் கண்காணிப்பார்கள்.
  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் முடியும் வரை இந்த குழுவானது செயல்பாட்டில் இருக்கும். லஞ்சம் கொடுப்பது, பெறுவது குறித்த புகார்கள், சமூக விரோதிகள் நடமாட்டம், சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கைப்பற்றுவது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • ஆதாரமின்றி எடுத்து செல்லப்படும் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க எடுத்து சென்றதாக கணக்கில் கொண்டு பறிமுதல் செய்ய வேண்டும். அதனை வீடியோவிலும் பதிவு செய்ய வேண்டும்.
  • ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், மதுபானங்களை கைப்பற்ற வேண்டும். ரூ.10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.
  • நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த தேவைக்காக ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் கண்டறியப்பட்டால் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பெண்களின் கைப்பைகளை பெண் காவலர்களே சோதனை செய்ய வேண்டும். அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. நாளை மறுநாள் சனிக்கிழமை மண்டல குழு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

காவல் அதிகாரிகள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு 11ம் தேதியும், மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் வீடியோ கிராபர்களுக்கு 15ம் தேதியும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On: 7 March 2024 8:54 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு