/* */

வியாசர்பாடியில் கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்

HIGHLIGHTS

வியாசர்பாடியில் கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம்  தாலிச்சங்கிலி பறிப்பு
X

கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் தாலிச்சங்கில் பறித்துச்சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 4வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன்(70.) இவர் சென்னை மாநகர போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மல்லிகா( 63 ). இவர் நேற்று காலை 7 மணியளவில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சர்மா நகர் முதல் மெயின் ரோடு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். மல்லிகா கூச்சலிட்டதால் அருகிலிருந்தோர் ஓடிவந்து மல்லிகாவை மீட்டு எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 30 Dec 2021 8:01 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!