/* */

குழந்தைகளுக்கு நெசவாளர்கள் மூலம் இயற்கை முறையில் ஆடைகள் உற்பத்தி: அமைச்சர் காந்தி உறுதி!

தமிழக குழந்தைகளுக்கு ரசாயனப் பொருள் கலக்காமல் இயற்கை முறையில் ஆடைகள் உற்பத்தி செய்யபடும் என கைத்தறி அமைச்சர் காந்தி உறுதியளித்தார்.

HIGHLIGHTS

குழந்தைகளுக்கு நெசவாளர்கள் மூலம் இயற்கை முறையில் ஆடைகள் உற்பத்தி: அமைச்சர் காந்தி உறுதி!
X

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

சென்னை எழும்பூர் கோ -ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் செயல்பாடுகள் குறித்து கைத்தறி அமைச்சர் காந்தி ஆலோசனை நடத்தினார்.. இந்த கூட்டத்தில் கைத்தறி துறை செயலாளர் அபூர்வா, கைத்தறி துறை ஆணையர் பிலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, கூட்டுறவு அங்காடிகளில் வாடிக்கையாளர்களுக்கு நன்மைதரும் பல திட்டங்கள் குறித்து செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஆலோசனை நடத்தினோம். பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கான ஆடைகள் வரை புதிய ரக வடிவமைப்புகள் அறிமுகபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

குழந்தைகளுக்கு ஏற்றவாறு ரசாயனப் பொருள் கலக்காமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்ய நெசவாளிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற முயற்சியில் அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Updated On: 10 Jun 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை