/* */

திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாடியும், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவும் ஆற்றினார்கள்.

HIGHLIGHTS

திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில்  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் 14 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். அதில், பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதி நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித் துறையினரால் நடத்தப்படும் என் அறிவித்தார்.

அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளை புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று 16.04.2022 சென்னை , இந்து சீனியர் பள்ளி மாணவ, மாணவிகள் மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடினார்கள். மேலும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாடியும், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவும் ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் வி.என். அண்ணாதுரை அவர்கள் வரவேற்றுப் பேசினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் என்.ஆர். கார்க்கி நன்றியுரை ஆற்றினார்.

Updated On: 17 April 2022 8:32 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  3. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  4. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  8. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  9. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  10. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!