சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண், நள்ளிரவு கைது
சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணை நள்ளிரவில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்னும் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி பாலியல் சீண்டலில் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் நேற்றைய முன் தினம் சிவசங்கர்பாபாவை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணைக்குப்பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிவசங்கர்பாபாவிடம் மேற்கொண்ட விசாரணைக்குப்பின் சுஸ்மிதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி முன்பு நள்ளிரவில் ஆஜர் படுத்தினர்.
பின்னர் அப்பெண்ணை வருகின்ற 2 ஆம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சிவசங்கர்பாபாவை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து இரண்டு நாட்கள்கூட ஆகாத நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,
அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணையும் அவரது பச்சிளம் குழந்தையுடன் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது நீதிபதிமுன்பு ஆஜர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.