/* */

தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

தனிநபரின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.

HIGHLIGHTS

தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அரியலூர்  தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
X

அரியலூர் அருகே  தனிநபரின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி  தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது துலாரங்குறிச்சி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதால் பொது மக்கள் போக்குவரத்துக்கு மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் என கூறி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தனியார் ஆக்கிரமிப்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தால், தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 24 Feb 2022 8:21 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது