/* */

சிறப்பாக பணி புரிந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் அளித்து பாராட்டினார்.

HIGHLIGHTS

சிறப்பாக பணி புரிந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
X

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் காவல்நிலைய குற்ற வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்த அருள் செல்வம் என்கிற கொளஞ்சி (32) என்பவரை விரைந்து கைது செய்ய உதவி புரிந்து மெச்சத் தகுந்த பணி செய்தமைக்காக சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தலைமை காவலர் இயேசுராமன் மற்றும் முதல் நிலை காவலர் சுந்தராஜன் ஆகியோருக்கும்,

குவாகம் காவல் நிலைய சரகத்தில் 28.04.2022 அன்று இரவு ரோந்து பணியில் இருந்த போது மணல் திருடி வந்தவர்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தும் மணல் திருடியவரை குவாகம் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்ய உதவி புரிந்தமைக்காக உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவலர் ராஜகண்ணன் ஆகியோரை

மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்.

Updated On: 1 May 2022 8:06 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது