/* */

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: 7ம் நாளில் இந்தியா ஆதிக்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: ஸ்ரீகாந்த், சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்; குத்துச்சண்டையில் அமித்திற்கு பதக்கம் உறுதி

HIGHLIGHTS

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: 7ம் நாளில் இந்தியா ஆதிக்கம்
X

பேட்மிண்டன், ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 16வது சுற்றுக்குள் நுழைந்தார். ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-9, 21-9 என்ற கணக்கில் டேனியல் வாங்கலியாவை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறினார்

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மாலதீவின் பாத்திமத் நபாஹாவை 21-4, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் 48 கிலோ-51 கிலோவுக்கு மேல் (பிளைவெயிட்) பிரிவில் ஸ்காட்லாந்தின் லெனான் முல்லிகனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அமித் பங்கால் இந்தியாவுக்கு குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்தார்.


பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் தனது 3-வது குரூப் 1 ஒற்றையர் ஆட்டத்தில் பிஜியை சேர்ந்த அகானிசி லாடுவை 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சோனால் 3-1 என்ற கணக்கில் நைஜீரியாவின் ஒபியோரா வை தோற்கடித்தார். இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

தடகளம், பெண்களுக்கான ஹாமர் எறிதல் போட்டியில் மஞ்சு பாலா 59.68 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Updated On: 4 Aug 2022 11:46 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது