/* */

TNPSC: உதவி சிறை அலுவலர் காலிப் பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு

TNPSC Notification: உதவி சிறை அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

TNPSC: உதவி சிறை அலுவலர் காலிப் பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு
X

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 11.05.2023 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




கட்டணங்கள்:

பதிவுக் கட்டணம்:

நிரந்திரப் பதிவுக்கட்டணம் (அஆநி) எண்:32, பணியாளர் (ம) நிர்வாக சீர்திருத்தத்துறை ரூ.150/- நாள் 01.03.2017-இன் படி திருத்தியமைக்கப்பட்ட கட்டணம்.)

குறிப்பு: நிரந்தர பதிவில் பதிவு செய்த நாளிலிருந்து ஐந்தாண்டுகள் முடிவுறாத விண்ணப்பதாரர்களுக்கு, இத்தேர்வுக்கான பதிவுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

தேர்வுக் கட்டணம்:

குறிப்பு: தேர்வுக்கட்டணச் சலுகை பெற தகுதியுடையவர்கள் தவிர பிற ரூ.100/- விண்ணப்பதாரர்கள், இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை

தேர்வுக் கட்டணம் ரூ.100/- ஐ (ரூபாய் நூறு மட்டும்) இணையவழியில் மட்டும் (இணைய வங்கி/ பற்று அட்டை கடன் அட்டை) விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளிற்குள் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சேவைக் கட்டணமும் இணைத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் கட்டணச் சலுகைக்கான தகுதியின் அடிப்படையில்தான் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற முடியும்.

இணையவழியில் தேர்வுக் கட்டணம் செலுத்தாமல், நேரடியாக செலுத்தும் வரைவு காசோலை அஞ்சலக காசோலை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வுக் கட்டணச் சலுகை கோரும் விண்ணப்பதாரர்களைத் தவிர ஏற்கனவே நிரந்தர பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவு முறையில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இந்த நிரந்தரப் பதிவு இப்பதவிக்குரிய தேர்வுக் கட்டணமாக கருதப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

1. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2. எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம் ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு (OTR) மற்றும் தன்விவரப்பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (One Time Registration ID) மற்றும் கடவுச் சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

3. ஒருமுறைப்பதிவில் பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை CD/DVD/Pen drive போன்ற ஏதேனும் ஒன்றில் பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

4. ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப் பதிவுக் கணக்கை (One Time Registration ID) உருவாக்க அனுமதியில்லை.

5. விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய தனித்துவமான பதிவுக்கணக்கு மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஏற்கனவே பதிவிட்ட தங்களது விவரங்களை பார்வையிடவும், புதுப்பிக்கவும் செய்யலாம். தங்களது ஒருமுறைப் பதிவு, கடவு சொல்லினை வேறு நபரிடமோ (அ) முகவர்களிடமோ பகிர்ந்து கொள்ள கூடாது.

6. ஒருமுறைப்பதிவு என்பது எந்தவொரு பதவிக்கான விண்ணப்பம் அல்ல. இது விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தன்விவரப் பக்கம் ஒன்றினை உருவாக்க மட்டுமே பயன்படும். எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அறிவிக்கையில் “Apply” என்ற உள்ளீடு வழியே நிரந்தரப்பதிவுக்குரிய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

7. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் பெயரை தெரிவு செய்ய வேண்டும்.

8. புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாமல் அனுப்பப்படும் இணையவழி விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும். இணையவழி விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்களை, விண்ணப்பதாரர் அவ்விணைய வழி விண்ணப்பங்களை சமர்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாள் வரை திருத்தம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இணையவழி விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி நாளுக்குப் பின்னர், விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரால் சமர்பிக்கப்பட்டுள்ள தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிப்பட மாட்டார்கள்.


மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Updated On: 13 April 2023 1:01 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...