/* */

பெற்றோரில்லா குழந்தைகளுக்கான கல்வி: ஆதரவளிக்கும் பிஎம் கேர்ஸ் -கல்வி இணை அமைச்சர்

பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர், வளர்ப்பு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் “குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ்”

HIGHLIGHTS

பெற்றோரில்லா குழந்தைகளுக்கான கல்வி: ஆதரவளிக்கும் பிஎம் கேர்ஸ் -கல்வி இணை அமைச்சர்
X

கல்வி இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி 

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த கல்வி இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கல்வி என்பது அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ள துறையாகும். மேலும், பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வி உரிமை சட்டம், 2009-ஐ செயல்படுத்துவதில் உதவுவதற்காக சமக்ரா சிக்ஷா திட்டத்தை கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயல்படுத்துகிறது.

முன்பள்ளியில் இருந்து தொடக்க, மேல்நிலைப் பள்ளிகள் வரை தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்வதை சமக்ரா சிக்ஷா நோக்கமாக கொண்டுள்ளது பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்வது சமக்ரா சிக்ஷாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

கோவிட்-19 காரணமாக ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வியை எளிதாக்க, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 16.06.2021 தேதியிட்ட கூட்டுக் கடிதத்தை அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பியது. அத்தகைய குழந்தைகளின் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதில் ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களின் பங்கை இந்தத் துறை கோடிட்டுக் காட்டுகிறது.

கூடுதலாக, கோவிட்-19 பெருந்தொற்றால் பெற்றோரை அல்லது அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது வளர்ப்பு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Updated On: 6 Dec 2021 4:35 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  6. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  7. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  8. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  9. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!