/* */

ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்-ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்கள் பங்கேற்க தடை

கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, வரும் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

HIGHLIGHTS

ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்-ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்கள் பங்கேற்க தடை
X

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக போட்டியை ரசிக்க வெளிநாட்டு ரசிகர்களுக்கு அந்நாடு தடை விதித்திருந்தது. உள்நாட்டு ரசிகர்கள் 10 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜப்பானில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, வரும் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார். இதனால், அவசர நிலை கட்டுப்பாடுகளுக்குட்பட்டே ஒலிம்பிக் போட்டி நடைபெறும். இதனையடுத்து, இந்த ஒலிம்பிக் திருவிழா பார்வையாளர்கள் இன்றி வித்தியாசமான முறையில் நடைபெற உள்ளது.

Updated On: 10 July 2021 1:51 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...