விருதுநகர் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே செங்கோட்டை கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு.
HIGHLIGHTS
விருதுநகர் செங்குன்றாபுரம் அருகில் செங்கோட்டை கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து காளியப்பன் வயது 85 முதியவர் இடிபாடுகளில் சிக்கி சடலமாக மீட்பு.
விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் அருகில் உள்ள செங்கோட்டை கிராமம் இந்த கிராமத்தில் வசிப்பவர் காளியப்பன். இவர் 75 வயது முதியவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவ மழையினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான கன மழை பெய்து வருகிறது.
இதேபோல் விருதுநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வந்த நிலையில் மழைவினால் காளியப்பன் வசித்துவந்த வீட்டில் சுவர் மிகவும் பலவீனமாகி இடிந்து விழுந்ததில் தனது வீட்டில் இருந்த காளியப்பன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.
உடனடியாக தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஜெசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருந்த சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.