/* */

விருதுநகர் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே செங்கோட்டை கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

விருதுநகர் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு
X

செங்கோட்டை கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த முதியவரை தீயணைப்புதுறையினர் மீட்டனர்.

விருதுநகர் செங்குன்றாபுரம் அருகில் செங்கோட்டை கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து காளியப்பன் வயது 85 முதியவர் இடிபாடுகளில் சிக்கி சடலமாக மீட்பு.

விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் அருகில் உள்ள செங்கோட்டை கிராமம் இந்த கிராமத்தில் வசிப்பவர் காளியப்பன். இவர் 75 வயது முதியவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவ மழையினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான கன மழை பெய்து வருகிறது.

இதேபோல் விருதுநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வந்த நிலையில் மழைவினால் காளியப்பன் வசித்துவந்த வீட்டில் சுவர் மிகவும் பலவீனமாகி இடிந்து விழுந்ததில் தனது வீட்டில் இருந்த காளியப்பன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

உடனடியாக தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஜெசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருந்த சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 6 Dec 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  4. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  5. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  6. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  7. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  9. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  10. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு