/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் வெள்ள பாதிப்பு ஆய்வு செய்த ஆட்சித் தலைவர். இணைப்புச் சாலையை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதிப்பு.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் நேரில் ஆய்வு
X

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ள பாதிப்பு மற்றும் கண்மாய்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதான சாலையை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்தார். 

ஸ்ரீவில்லிபுத்தூர் வெள்ள பாதிப்பு ஆய்வு செய்த ஆட்சித் தலைவர். இணைப்புச் சாலையை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதிப்பு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ள பாதிப்பு மற்றும் கண்மாய்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதான சாலையை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மொட்டபத்தான் கண்மாய் கரை உடைந்து நகருக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நகரின் மையப்பகுதியான ஒட்டமடம், ஆராய்ச்சிபட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வைத்தியநாத சுவாமி கோவிலில் மழை நீர் புகுந்ததால் உள் மற்றும் வெளிப்புற பிரகாரங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மேகநாத ரெட்டி மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். குறிப்பாக திருமுக்குளம், பெரியகுளம் கண்மாய் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த ஆட்சித்தலைவர் திருமுக்குளம் கரையில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரையும் இணைக்கும் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் செல்வோர் நல்ல குற்றாலம் தெரு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 4 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்