/* */

விருதுநகர் சாலை விபத்து: இரண்டு தொழிலாளிகள் உயிரிழப்பு

விருதுநகர் அருகே, கார் மோதிய விபத்தில், விவசாயப் பணிக்கு வந்த 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

HIGHLIGHTS

விருதுநகர் சாலை விபத்து: இரண்டு தொழிலாளிகள் உயிரிழப்பு
X

விருதுநகர் அருகேயுள்ள செங்குன்றாபுரம் பகுதியில் விவசாயப் பணிகள் செய்வதற்காக, மதுரை மாவட்டம் முருகனேரி பகுதியிலிருந்து 20 தொழிலாளர்கள் வந்திருந்தனர். நாற்று நடும் பணிகளை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிச் செல்வதற்காக செங்குன்றாபுரம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பாலத்தில் ஓரமாக அமர்ந்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக வத்திராயிருப்பில் இருந்து, விருதுநகருக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி, பாலத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த முருகனேரி பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி (45), பேச்சியம்மாள் (54), செல்வவதி (55), பாண்டியம்மாள் (40), பாப்பா (50) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முத்துச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பேச்சியம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, கார் ஓட்டுநர் தென்காசி மாவட்டம், தென்மலையைச் சேர்ந்த ராஜ்குமார் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாய கூலி வேலைக்கு வந்த பெண்கள் இரண்டு பேர், கார் மோதி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 6 Nov 2023 8:58 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை