Begin typing your search above and press return to search.
அருப்புக்கோட்டையில் பலத்த மழை: மின்தடையால் பொதுமக்கள் அவதி
வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடச்சியாக மழை பெய்து வருகிறது.
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடச்சியாக மழை பெய்து வருகிறது.
அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, ராமசாமிபுரம், ஆத்திபட்டி, காந்திநகர், ராமானுஜபுரம், கோபாலபுரம், கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுட்டார பகுதிகளில் காற்றுடன், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
திடீரென பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் திடீர் மின் தடையால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.