/* */

அருப்புக்கோட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த அருப்புக்கோட்டை தேர்தல் பறக்கும் படையினர்

HIGHLIGHTS

அருப்புக்கோட்டையில்  உரிய ஆவணங்கள் இன்றி  கொண்டு சென்ற பணம் பறிமுதல்
X

பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர் 

அருப்புக்கோட்டை காந்திநகர் அருகே அருப்புக்கோட்டை -கமுதி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் சோப் ஆயில், பினாயில் மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகிய பொருட்களை சில்லறை வணிக கடைகளுக்கு மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரி விஜயகுமார் என்பவர் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர் வைத்திருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தனர்.

Updated On: 5 Feb 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்