Begin typing your search above and press return to search.
விழுப்புரம் கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழி
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரியாரின் 143-வது பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாட அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் சமூக நீதி நாள் கடைபிடிக்கப்பட்டு, அதற்கான உறுதிமொழியினை இன்று அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.