/* */

இறந்தவரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்ததாக மோசடி செய்தவர் மீது புகார்

விழுப்புரத்தில், இறந்த கணவரிடம் பணம் கொடுத்ததாக மோசடி செய்தவர் மீது, இறந்தவர் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

HIGHLIGHTS

இறந்தவரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்ததாக மோசடி செய்தவர் மீது புகார்
X

விழுப்புரம் காவல் நிலையம்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் மனைவி கவிதா (41). இவர் விழுப்புரம் முத்தாம்பாளையத்தை சேர்ந்த தங்கராசு (57) என்பவருடைய கடையில் 2 கடைகளை வாடகைக்கு எடுத்து 2014 முதல் 2019 வரை ஓட்டல் நடத்தி வந்தார்.

அந்த கடைக்கு முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்திருந்தார். 2019-ல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தங்கராசு, தனது கடைகளை மூடிவிட்டார். அவர், கவிதாவிடம் ஓட்டலை காலி செய்ய சொன்னதால் அவரும் கடையை காலி செய்தார். அப்போது கவிதா, தங்கராசுவிடம் தான் கொடுத்த முன்பணத்தை தரும்படி கேட்டார். ஆனால் தங்கராசு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் கவிதா அப்போது காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அப்போது தங்கராசு, கவிதாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிக்கொடுப்பதாக காவல் நிலையத்தில் கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் கவிதாவின் கணவர் அசோக்குமார், 2022-ல் இறந்துவிட்டார். இந்த சூழலில் கவிதா, தங்கராசுவிடம் சென்று தனக்கு கொடுக்க வேண்டிய முன்பணத்தை தரும்படி கேட்டார். அதற்கு உங்கள் கணவரிடம் பணம் கொடுத்து விட்டேன் என்று கூறி கவிதாவுக்கு தங்கராசு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கவிதா, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தங்கராசு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Jan 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!