/* */

பொங்கல் பரிசுடன் மண்பானை சேர்க்கப்படுமா? மக்கள் கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

பொங்கல் பரிசுடன் மண்பானை சேர்க்கப்படுமா? மக்கள் கோரிக்கை
X

பைல் படம்.

பொன்னுசாமி விழுப்புரம்,9345614189

நலிவடைந்து வரும் மண் பானை தொழில் பொங்கல் பரிசில் சேருமா

விழுப்புரம்,டிச.1-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் நலிவடைந்து வரும் இத்தொழிலை காப்பாற்ற இதனை பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றானதும், தமிழர் திருநாளானதுமான பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாக கொண்டுள்ளனர். இதற்காக விழுப்புரம் அருகே சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு, விக்கிரவாண்டி,பனபாக்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு தயார் செய்யப்படும் மண் பானைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல வெளிமாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பருவ மழையை கருத்தில் கொண்டு சற்று முன்னதாகவே மண் பானைகள் தயாரிக்கும் பணியை மண்பாண்ட தொழிலாளர்கள் தொடங்கியுள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்போதே விழுப்புரம் பகுதியில் மண்பானைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அளவிலான பானைகள் முதல் பெரிய அளவிலான பானைகளை தயாரித்து வருகின்றனர். இவ்வாறு தயார் செய்யப்பட்ட பானைகளை நன்கு உலர வைத்து பின்னர் சூளைபோட்டு வேக வைக்கின்றனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் விதமாக பரம்பரை, பரம்பரையாக மக்கள் பொங்கல் வைத்து வருகின்றனர், இதனை நம்பி குயவர்கள் இன மக்கள் காலங்காலமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். வருடத்தில் கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை வைத்துதான் இம்மக்களின் வாழ்வாதாரமே உள்ளது. சுவையும், ஆரோக்கியமும் தந்த மண்பானை சமையல் தற்போது கிராமங்களில் கூட அரிதாகி வருகிறது. அதுபோல் மண்பாண்ட பொருட்களின் பயன்பாடும் கிராம மக்களிடம் குறைந்து வருகிறது. இதனால் இந்த தொழில் நலிவடைந்து அதனை நம்பியிருந்த பலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர்.

ஆனால் ஒரு சில கிராம மக்கள் பழமை மாறாமல் மண் பாண்டங்களை பயன்படுத்தி வருவதால் அவர்களின் தேவைக்காக ஆண்டுதோறும் மண் பானைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சமையல் கியாஸ் அடுப்புகளில் பாத்திரங்களை வைத்து பொங்கல் வைத்து விடுகின்றனர்.

நாட்டில் பள்ளி- கல்லூரிகள் மற்றும் சமூக அமைப்புகள் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக மண்பானையில் பொங்கலிடுவதை மரபாக கடைபிடித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் பெயரளவில் பண்பாட்டை கடைபிடித்து வருகின்றனர். அதனால் பள்ளி- கல்லூரிகளில் இருந்துதான் அதிகளவில் மண்பானைகளை அம்மக்களிடம் இருந்து வாங்கிச் செல்கின்றனர் என்பதால் தற்போது மண்பானைகளை மும்முரமாக தயாரித்து வருகின்றனர்.

அதனால் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையிலும் அரசு சார்பில் மண் பானைகளை கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து மண் பானையையும் வழங்க வேண்டும் என அம்மக்கள் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Jan 2023 8:12 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...