/* */

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமார் அமைச்சர் பொன்முடியுடன் வந்து தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். கடந்த இருபதாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் 27ஆம் தேதி கடைசி நாள்.

இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார். அமைச்சர் பொன்முடி. காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்து அலுவலரும், மாவட்ட ஆட்சியர் பழனியிடம் ரவிக்குமார் வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் பொன்முடி. காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி கூறியதாவது: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ஐஎன்டிஐஏ கூட்டணி கட்சியின் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ரவிக்குமார் மீண்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐந்தாம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விழுப்புரம் தொகுதிக்கு வர உள்ளார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்ய உள்ளார்

இந்த பிரச்சாரங்களின் மூலமாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ரவிக்குமார் வெற்றி பெறுவார் என்று கூறினார்

அதனைத் தொடர்ந்து செய்து செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார் கூறுகையில், இந்த கூட்டணியை வழி நடத்தும் கட்சியான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் இந்த கூட்டணியை சேர்ந்த 39 வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற பாடுபடுவோம் என தெரிவித்தார்.

Updated On: 26 March 2024 8:44 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  2. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  3. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  4. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  9. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு