/* */

வெறும் கையில் துப்புரவு பணி: திண்டிவனத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கையில் துப்புரவு பணி செய்வதாக திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தில்கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

HIGHLIGHTS

வெறும் கையில் துப்புரவு பணி: திண்டிவனத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
X

திண்டிவனத்தில் நடைபெற்ற நகரமன்ற கூட்டம்

திண்டிவனம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜனார்த்தனன், தூய்மை பணியாளர்கள் வெறும் கையோடு சாக்கடையை சுத்தம் செய்யும் புகைப்படத்தை காண்பித்து, அவர்களுக்கு கையுறை உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே கோரிக்கையை துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேலும் வலியுறுத்தினார்.

மேலும் பெரும்பாலான கவுன்சிலர்கள், தங்களது வார்டில் பாதாள சாக்கடை திட்டம் பாதியில் நிற்பதாகவும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர். அதற்கு நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து கவுன்சிலர்கள் தங்களது வார்டில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆணையர் தட்சிணாமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

Updated On: 28 Aug 2022 12:29 PM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  2. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  3. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  4. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  5. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  7. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா