/* */

விழுப்புரத்தில் மினி டைடல் பார்க் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்சிற்றம்பலத்தில் 31 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மினி டைடல் பார்க்  உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
X

விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள 1374 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் 80 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 270 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டிடங்கள், ரூ.3.92 கோடி செலவில் நூலகக் கட்டிடம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் 59.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 15 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 29.93 கோடி ரூபாய் செலவில் காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்று நோய் பிரிவுக் கட்டிடம், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 3 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ளன. இந்த பல்வேறு துறைக் கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சனிக்கிழமை திறந்து வைத்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 592 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 கோவில்களில் கட்டப்பட உள்ள புதிய ராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்து உள்ள கீழூர் ஊராட்சியில் 139 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி என மொத்தம் 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும் இன்போசிஸ் அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, அம்மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Feb 2024 1:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!