/* */

வேலூர்: ரயிலில் மது கடத்திய மாணவர் உட்பட 7 பேர் கைது!

வேலூர் மாவட்டத்தில் ரயில்களில் கடத்திய கர்நாடக மாநில சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வேலூர்: ரயிலில் மது கடத்திய மாணவர் உட்பட 7 பேர் கைது!
X

பறிமுதல் செய்யப்பட்ட மது வகைகள்.


தமிழகத்தில் கொரோனா 2 வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 7 ம் தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ளது . இந்த ஊரடங்கில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன . இதனால் குடிமகன்கள் மது கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர் .இதனால் அண்டை மாநில சரக்குகளும், கள்ளச்சாராய நடமாட்டமும் அதிகரித்துள்ளது .

குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் சாஷே பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மது வகைகளும், மது பாட்டில்களும் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன .

இதனால் ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி தொடங்கி இன்று 5 ம் தேதி வரை கடந்த 10 நாட்களில் மொத்தம் 209.33 லிட்டர் பிராந்தி , விஸ்கி, ரம், ஓட்கா மதுபாட்டில்கள், சாஷே பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன .

இது தொடர்பாக வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் ( 30 ), பெங்களூருவை சேர்ந்த பிரேம்குமார் (25), ஆற்காடு கலவைரோட்டை சேர்ந்த ஜாகீர்உசேன் ( 27 ) , வரகூர் பட்டினத்தை சேர்ந்த மோகன் ( 22 ) , போளூர் சனிக்கவாடியை சேர்ந்தயுவராஜ் ( 25 ) , சோளிங்கர் அடுத்த சூரையை சேர்ந்த பாபு ( 40 ) , பெங்களூரு சிவாஜி நகரை சேர்ந்த சரத்குமார் ( 27 ) ஆகிய 7 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர் . மேலும் போலீசாரை பார்த்ததும் தலைமறைவான 2பேரை தேடிவருகின்றனர் .

இதையடுத்து பிடிபட்ட 7 பேரையும், கைப்பற்றப்பட்டமதுபாட்டில்கள், சாஷே பாக்கெட்டுகளையும் வேலூர் கலால் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கலால் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Updated On: 5 Jun 2021 2:34 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...