வந்தவாசி பெருமாள் கோயில் ஸ்ரீ வைணவ மாநாடு
வந்தவாசியில் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோவிலில் 35 -ஆம் ஆண்டு வைணவ மாநாடு நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் ஸ்ரீமத் நாதமுனி சுவாமிகள் வைணவ சபையில் 35 ஆம் ஆண்டு வைணவ மாநாடு நடைபெற்றது.
திண்டிவனம் வெங்கடேச சுவாமிகள் தலைமை வகித்தார். மணிவண்ணன்ராமானுஜதாசர் முன்னிலை வகித்தார். செயலாளர் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார் . டாக்டர் குமார், தலைமை ஆசிரியர் சுகுமாரன் ஆகியோர் கருட கொடியை ஏற்றினர்."பெரியாழ்வார் பெண் பிள்ளை" என்ற தலைப்பில் லட்சுமி நாராயண சுவாமிகள் சொற்பொழிவாற்றினார்.டாக்டர் உ. வே. வெங்கடேஷ் " நம்பியும் நங்கையும்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பல்வேறு கைங்கரியங்களை செய்து வரும் டாக்டர். பி. ஸ்ரீதருக்கு "கைங்கரிய செல்வர்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பாகவதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக பஜனை கோஷ்டியினர் கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பெருமாள் கோவிலுக்கு பெருமாள் பாசுரங்களை பாடி ஊர்வலமாக வந்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இறுதியில் முத்துராமானுஜ தாசர் நன்றி கூறினார்.