/* */

வந்தவாசி பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

வந்தவாசி,பெரணமல்லூர்,தெள்ளார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 78 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

HIGHLIGHTS

வந்தவாசி பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு
X

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

வந்தவாசி,பெரணமல்லூர்,தெள்ளார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 557 பயனாளிகளுக்கு ரூ.78 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார். பேரவை துணைத்‌ தலைவர்‌ கு.பிச்சாண்டி, எம்‌.கே.விஷ்ணுபிரசாத்‌ எம்‌.பி., எம்‌.எல்‌.ஏ.க்கள்‌ எஸ்‌.அம்பேத்குமார்‌, ஓ.ஜோதி, மு.பெ.கிரி, கூடுதல்‌ ஆட்சியர்‌ மு.பிரதாப்‌ உள்ளிட்டோர்‌ முன்னிலை வகித்தனர்‌. திமுக மாவட்ட பொறுப்பாளர்‌ எம்‌.எஸ்‌.தரணிவேந்தன்‌ வரவேற்றார்‌.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 2,381 பேருக்கு பிரதமர்‌ வீடு, 54 பேருக்கு இலவச மனைப்‌ பட்டா, 54 பேருக்கு கோவிட்‌ இறப்பு நிவாரணத்‌ தொகை, 224 பேருக்கு முதியோர்‌ உதவித்‌ தொகை உள்பட மொத்தம்‌ 6,557 பேருக்கு ரூ.78 கோடியில்‌ நலத்‌ திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் திமுக மாவட்ட அவைத்‌ தலைவர்‌ கே.ஆர்‌.சீதாபதி, வட்டாட்சியர்‌ முருகானந்தம்‌, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ சு.வி.மூர்த்தி, ஆர்‌.குப்புசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2021 7:36 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  3. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  4. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  5. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  10. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!