/* */

மல்லவாடி பகுதியில் பைக்கில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது

திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி பகுதியில் பைக்கில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மல்லவாடி பகுதியில் பைக்கில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது
X

பைல் படம்.

திருவண்ணாமலை தாலுகா போலீசார் மல்லவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பைக்கிள் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிர சோதனை நடத்தினர்.

விசாரணையில் அவர் மல்லவாடி பகுதியைச் சேர்ந்த குப்பன் (வயது 23), என்பதும், அவர் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 18 July 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...