/* */

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் 7 வாரங்களுக்கு பிறகு இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம்
X

மக்கள் குறைதீர்வு கூட்டம் திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் தடை செய்யப்பட்டது. மேலும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ,பட்டா மாறுதல், முகாம் போன்றவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து இருப்பதால் மீண்டும் இன்று முதல் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் , அதேபோல் கிராம அளவில் நடைபெறும், பட்டா மாறுதல் முகாம், மனுநீதி நாள் முகாம் ,மாவட்ட அளவிலான மற்றும் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்தும் மற்றும் மாற்றுத்திறனாளி டமிருந்தும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Feb 2022 1:08 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்