/* */

திருவண்ணாமலை நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணி

திருவண்ணாமலை நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணி
X

பாதாள சாக்கடை பணிகளை துவக்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சியில் ரூபாய் 97 கோடி மதிப்பீட்டில் விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தினை காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து

திருவண்ணாமலை நகராட்சி அண்ணா நகர் 5 வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ. வ. வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 2022-23 என்ற திட்டத்தின் மூலம் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணிகள் திருவண்ணாமலை நகராட்சியில் விடுபட்ட 17 வது வார்டு பகுதிகள், போளூர் ரோடு, அவலூர்பேட்டை சாலை, பல்லவன் நகர் ,மத்திய பேருந்து நிலையப் பகுதிகள், புது தெரு, சகாயம் நகர் ,பெரும்பாக்கம் சாலை, செங்கம் சாலை, தாமரை நகர், அண்ணா நகர், மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரூபாய் 97.67 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

மேற்படி பணிக்கு மதிப்பீட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளவை பின்வருமாறு தொழில்நுட்பம் - எஸ்.பி.ஆர் விடுபட்ட வார்டுகளின் எண்ணிக்கை 17 வார்டுகள் பாதாள சாக்கடை வீட்டிணைப்புகள் ஒன்பதாயிரத்து நூற்று தொன்னூற்று இரண்டு எண்ணிக்கை, சாலையோர கழிவு நீரேற்று நிலையம் (எல்எஸ்) 18 எண்ணிக்கை, கழிவு நீரேற்று நிலையம் (பிஎஸ்) 4 எண்ணிக்கை சுத்திகரிப்பு நிலையம் (எஸ்டிபி) 1 (13.16 எம்எல்டி), கழிவு நீர் பைப்லைன் (எஸ்எல்) 107.39 கி.மீ பிரதான கழிவு நீர் பைப்லைன் (பிஎம்) 15.230 கி.மீ மதிப்பீட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்யாறு நகராட்சி, ஆரணி நகராட்சி, வந்தவாசி நகராட்சியில் என ஒவ்வொரு நகராட்சிகளிலும் ரூபாய் 5 கோடியில் மொத்தம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியினையும் தொடாங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், நகரமன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் வசந்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Feb 2024 1:29 PM GMT

Related News