இரவு ஊரடங்கில் வெறிச்சோடிய திருவண்ணாமலை
இரவு நேர ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை நகரம் வாகனங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
HIGHLIGHTS
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டாவது அலை அதிகரித்து வரக்கூடிய நிலையில் தமிழக அரசு நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
திருவண்ணாமலையில் நேற்று இரவு 9 மணி மணிக்கெல்லாம் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டது. மேலும் போலீசார் தங்களுடைய வாகனங்களில் ஒன்பது முப்பது மணிக்கு மேல் ஒலி எழுப்பியும், ஒலிபெருக்கி மூலம் கடைகளை மூடச் சொல்லியும் அறிவுறுத்தினர்.
சரியாக 10 மணிக்கு திருவண்ணாமலை முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையமும் பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இரவு 10 மணிக்கு மேல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த அவர்களை அழைத்து அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தார்.