Begin typing your search above and press return to search.
கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஆய்வு
கொரோனா சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைள், அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி, செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் 70 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தையும் அதே வளாகத்தில் அமைந்துள்ள 100 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினையும் ஆய்வு செய்தார்.
பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைள், அடிப்படை வசதிகள் மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான பே கோபுரம் முதல் தெருவில் நடைபெற்று வரும் காய்ச்சல் முகாமினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.