கல்யாணமும் முக்கியம், கல்வியும் முக்கியம்
அரசு கலைக் கல்லூரியில் திருமண கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி
HIGHLIGHTS
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் திருமண கோலத்தில் மாணவி தேர்வு எழுதினர். தற்போது தமிழ்நாடு முழுவதும் கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை அருகே உள்ள பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமுதா . இவர், திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை வரலாறு படித்து வருகிறார்.
மாணவிக்கு காலை திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடந்தது. இதனை குமுதா எழுத முடிவு செய்தார். அதன்படி திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே அவர் மணக்கோலத்தில் கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினார். திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியை கல்விதான் முக்கியம் என்று இறுதியாண்டு கல்லூரி தேர்வு எழுத அழைத்து வந்த கணவனின் செயல் அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது. அவரை பேராசிரியர்கள் பாராட்டினர்.