நிலுவைத் தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை
நிலுவைத் தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களாக பதிவு செய்தவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொது மக்களுக்கு அனலாக் ஒளிபரப்பியதற்காக சந்தாதாரர்களிடம் மாதம் தோறும் வசூல் செய்த சந்தா தொகையில் அரசுக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகையினை கடந்த 10 ஆண்டுகளாக செலுத்தாமல் நிலுவையில் வைத்து உள்ளனர். இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொகையை செலுத்திட பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாகவும், தபால் அனுப்பியும் நிலுவை தொகையை செலுத்தாமல் உள்ளனர். எனவே கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இன்னும் 7 நாட்களுக்குள் அனலாக் நிலுவை தொகை முழுவதையும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தவில்லை என்றால் நிலுவை தொகையினை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.