/* */

நிலுவைத் தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை

நிலுவைத் தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை

HIGHLIGHTS

நிலுவைத் தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது  நடவடிக்கை
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் 

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களாக பதிவு செய்தவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொது மக்களுக்கு அனலாக் ஒளிபரப்பியதற்காக சந்தாதாரர்களிடம் மாதம் தோறும் வசூல் செய்த சந்தா தொகையில் அரசுக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகையினை கடந்த 10 ஆண்டுகளாக செலுத்தாமல் நிலுவையில் வைத்து உள்ளனர். இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொகையை செலுத்திட பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாகவும், தபால் அனுப்பியும் நிலுவை தொகையை செலுத்தாமல் உள்ளனர். எனவே கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இன்னும் 7 நாட்களுக்குள் அனலாக் நிலுவை தொகை முழுவதையும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தவில்லை என்றால் நிலுவை தொகையினை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!