திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்
மாடவீதிகளில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற உள்ளதால், காவல் தெய்வங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது
HIGHLIGHTS
ஒவ்வொரு கோயிலை சுற்றிலும் அதனை பாதுகாக்க திக் பாலகர்கள் என்ற தெய்வத்தை ஆகம விதிப்படி நிறுவுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் எட்டு திசைகளிலும் திக் பாலகர்கள் உள்ளனர்.
கோயிலை சுற்றி கிழக்கு இந்திரன்,. தென்கிழக்கில் அக்னி, தெற்கு எமன்,. தென்மேற்கு நிருதி,,. மேற்கு வருணன், வடமேற்கில் வாயு, வடக்கு குபேரன், வட கிழக்கு ஈசானியம் என எட்டு திசைகளிலும் காவல் தெய்வங்கள் அஷ்டதிக்கு பாலகர்களாக உள்ளனர்.
கோயிலில் உற்சவம் நடைபெறும் நாட்களில் கோயிலில் இருந்து சிவாச்சாரியார் மற்றும் கோவில் ஊழியர்கள் அஸ்திரதேவர் என்ற உற்சவர் உடன் சென்று காவல் தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து அன்னம் இடுவது வழக்கம். அதன்பிறகுதான் சாமி மாட வீதி உலா நடைபெற்று வருகின்றன.
தற்போது மாடவீதி சுற்றிலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணியை தொடங்கி வைத்து உள்ளார். இப்பணி தற்போது நடைபெற்று வருவதால் மாடவீதியை சுற்றியுள்ள 8 பலி பீடங்களையும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சாமி சன்னதி முன்பு 8 கலசங்கள் வைக்கப்பட்டு சிவாச்சாரியர்கள் பாலாலய பூஜை செய்தனர்.
இதன்பிறகு பலிபீடங்களை கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் வைக்கப்படுவதாக கூறப்படுகின்றன.